சபரிமலை கோயில் சன்னிதானம் எனவும் அழைக்கப்படுகின்றது. சன்னிதானம் என்பது சொர்க்க வாசஸ்தலம் அல்லது கடவுள் வசிக்கும் வீடு ஆகும். கோயிலானது தரை மட்டத்திலிருந்து 40 அடி உயரத்தில் உள்ள சமவெளியில் அமைந்துள்ளது. நான்கு குவிமாடங்களுடன் கூடிய தங்கப் படலத்தால் மூடப்பட்ட கூரையைக் கொண்ட பிரதானக் கோயில் (கருவறை), இரண்டு மண்டபங்கள் (மச்சு வீட்டின் முகப்பு போன்ற அமைப்புகள்), பலிபீடம் (தியாக கல் பீடங்கள்), பலிக்கல்புரா (சடங்கு திருப்படையல்களுக்கான கல் அமைப்பு) மற்றும் தங்கத் தகடு வேயப்பட்ட கொடிமரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சன்னிதானத்திற்குச் செல்லும் பதினெட்டாம்படி அல்லது பதினெட்டுப் படிகள் தங்கக் கவசம் இடப்பட்டுள்ளன. பதினெட்டு படிகளின் அடிவாரத்தில் பக்கவாட்டில், வலியகடுத்த சுவாமி மற்றும் கருப்ப சுவாமி என்ற இரண்டு துவாரபாலகர்கள் அல்லது வாயிற்காவலர்கள் உள்ளனர். வாவர் நாடா இதற்கு அருகில் அமைந்துள்ளது. நெய் படையல் செலுத்திய பின், பக்தர்கள் காலி நெய்த் தேங்காயை (படையலுக்கான நெய் நிரப்பப்பட்ட தேங்காய்) கீழேயுள்ள ஆழிக்குள் (புனித தீக்குழி) எறிகின்றனர்.
சன்னிதானத்திலிருந்து சுமார் நூறு மீட்டர்கள் தொலைவில், மாளிகைப்புரத்தம்மா கோயில், மணிமண்டபம், கொச்சுகடுத்த சுவாமி, நவகிரகங்கள், நாக கன்னியர் சிலைகள், நாகராஜா (பாம்புகளின் அரசன்) மற்றும் நாகயக்ஷி (பாம்புகளின் அரசி) ஆகியோரின் கோயில்கள் காணப்படுகின்றன.