பேக்கல் மட்டி பூட்ஸ் (Bekal Muddy Boots) வழங்கும் மூங்கில் தெப்பச் சவாரியானது பரபரப்பு அல்லது வேகத்தை விட இயற்கை, ஒத்திசைவு, உள்ளூர் நிலப்பரப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்ற மெதுவான, ஆழ்ந்த காயல் அனுபவம் ஆகும். திறந்தநிலைக் கடற்பகுதியில் இருந்து விலகி அமைந்துள்ள இந்தச் செயல்பாடு உங்களை அமைதியான உள்நாட்டு நீர்வழிகள் வழியாக அழைத்துச் செல்கிறது. அவ்வழியில் அலையாத்திக் காடுகள் நீருக்கு நெருக்கமாக வளர்ந்துள்ளன, பறவைகள் தடையின்றி உலாவுகின்றன, வாழ்க்கையின் வேகம் குறிப்பிடத்தக்க வகையில் நிதானமாக இருப்பதாக உணரப்படுகிறது. முற்றிலும் மூங்கிலால் செய்யப்பட்ட அந்தத் தெப்பம் மிகவும் நிலையாகவும் உறுதியாகவும் இருப்பதால், பங்கேற்பாளர்கள் ஏதேனும் நடவடிக்கைக்குத் தயாராவதற்குப் பதிலாக ஆசுவாசமாகத் தங்கள் சூழலைக் கூர்ந்து கவனிக்க முடிகிறது.
காயல்களின் நீரோட்டம், ஓதங்கள், பருவகால மாற்றங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்த பயிற்சி பெற்ற உள்ளூர் மக்களால் இந்தப் பயணம் வழிநடத்தப்படுகிறது. கம்புகள் மற்றும் துடுப்புகளின் உதவியுடன் தெப்பம் மெதுவாக முன்னோக்கி நகரும்போது, பங்கேற்பாளர்கள் குறுகிய கால்வாய்கள், நிழல் நிறைந்த பகுதிகள், வானத்தையும் சுற்றியுள்ள பசுமையையும் பிரதிபலிக்கின்ற திறந்த நீர்நிலைகள் ஆகியவற்றின் வழியாகக் கடந்து செல்கின்றனர். இங்குள்ள மூங்கில் தெப்பச் சவாரி குடும்பங்களுக்கும், சாகச நடவடிக்கைகளில் முதன்முறையாக ஈடுபடுபவர்களுக்கும், உண்மையான, மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் அமைதியான, இயற்கையோடு தொடர்புடைய செயல்பாட்டைத் தேடுபவர்களுக்கும் உகந்ததாகும்.
மூங்கில் தெப்பச் சவாரி செயல்பாடுகள் பேக்காலுக்கு அருகிலுள்ள காயல் பகுதிகளில் நடத்தப்படுகின்றன. பேக்கல், அலையாத்திக் காடுகள் சூழ்ந்த கால்வாய்களுக்கும், வலுவான நீரோட்டங்கள் மற்றும் திறந்தநிலைக் கடல் சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பான தொலைவில் அமைந்துள்ள உள்நாட்டு நீர்நிலைகளுக்கும் அருகில் அமைந்துள்ளது. நீர்மட்ட நிலையையும் நீரோட்ட நிலவரங்களையும் பொறுத்து, செயல்பாட்டைத் தொடங்குவதற்கான சரியான இடம் அன்றைய தினத்தன்று ஆபரேட்டரால் உறுதிசெய்யப்படும். பேக்கல் நகரத்தில் இருந்தும் அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் சாலை மார்க்கமாக இந்த இடத்துக்கு எளிதில் சென்றடையலாம்.
பேக்கல் கோட்டை: 3–5 கி.மீ.
பள்ளிக்கரா / காஞ்சிரங்காட்: 4–7 கி.மீ.
காசர்கோடு நகரம்: 15–20 கி.மீ.
மங்களூரு சர்வதேச விமான நிலையம்: 65–75 கி.மீ.
இந்தச் செயல்பாடு காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது.
அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட தெப்பச் சவாரி உட்பட, ஒவ்வோர் அமர்வும் தோராயமாக 60 முதல் 120 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
குறிப்பாக வார இறுதி நாட்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ள நாள்களிலும் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தச் செயல்பாடு பொதுவாக 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும், குழந்தைகளுக்குத் துணையாக பெரியவர்கள் உடன் வர வேண்டியிருக்கும்.
இந்த அனுபவம் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்றது; தெப்பச் சவாரி அல்லது நீச்சல் குறித்த முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.
நீர் மட்டங்களையும் வானிலை நிலைமைகளையும் பொறுத்து இந்தச் செயல்பாட்டை மேற்கொள்ள அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான காலம் உகந்தது.
ஒரு நபருக்கான கட்டணம் பொதுவாக 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை வேறுபடுகிறது (கால அளவு மற்றும் குழுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது)
தெப்பத்தின் மீது ஏறி நிற்பது, திடீரென அங்குமிங்கும் நகர்வது, அல்லது மூங்கில் கட்டமைப்பின் சமநிலையைக் குலைப்பது ஆகியவை அனுமதிக்கப்படுவதில்லை. செயல்பாட்டுக்கு முன்னர் மது அருந்துதல் அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தெப்பச் சவாரி மேற்கொள்ளும்போது புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றது.
தங்கள் தனிப்பட்ட சாதனங்களைத் தண்ணீரில் நனையாதவாறு பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது புகைப்படங்கள் எடுக்க வழிகாட்டி உதவுவார்.
உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறாவிட்டால் காயல் பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
வழிகாட்டப்பட்ட மூங்கில் தெப்பச் சவாரி அமர்வு
மூங்கில் தெப்பம்
அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் உயிர்க்காப்பு மேலங்கி
செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன் அடிப்படைப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்
வழிநடத்துதலுக்கும், நீர்நிலையில் பயணிக்கும்போது பாதுகாப்புக்கும் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள்
சவாரி மேற்கொள்ளும் நேரம் முழுவதும் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் உயிர்க்காப்பு மேலங்கிகள் கட்டாயமாகும். பங்கேற்பாளர்கள் எல்லா நேரங்களிலும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பை உறுதிசெய்ய கனமழை, பாதுகாப்பற்ற நீரோட்டம், அல்லது சாதகமற்ற வானிலைச் சூழல்கள் நிலவும் பட்சத்தில் இந்தச் செயல்பாடு ஒத்திவைக்கப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம்.