வர்க்கலாவின் பாறைக் குன்றும் மற்றும் கடற்கரைகளும் (பாபநாசம் கடற்கரை உட்பட) அலைச்சறுக்கு, பாராசெயிலிங், பாராகிளைடிங், தனிநபர் துடுப்புப் படகு ஆகியவற்றுக்காக கேரள சுற்றுலாத் துறையின் ஐந்து நட்சத்திரத் தலங்களாகத் திகழ்கின்றன. பாராசெயிலிங் செம்மண் பாறைகளுக்கும், கடற்கரைக்கும் மேலாக உயரே பறக்கும்போது சிலிர்ப்பூட்டுவதாக உள்ளது, பொதுவாக இந்த வசதி ஜாய் வாட்டர் ஸ்போர்ட்ஸ் போன்ற நீர் விளையாட்டுச் சேவை வழங்குநர்களால் மேற்கொள்ளப்படுகிறது.


விரைவுத் தகவல்

குறிப்புகள்

வெயிலின் தாக்கம் குறைவான இருக்கும் காலை நேரத்தின் முற்பகுதியிலும், அந்திவேளையிலும் பறக்கும்போது வெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும்.

பொதுவாக நிலம்சூழ் விரிகுடாக்களை விட இங்கு கடல் கொந்தளிப்பாகவும் அலைகள் அதிகமாகவும் இருக்கும். எனவே பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளவும்.

பாய்மரப் படகுச் சவாரியுடன் அலைச்சறுக்கு, கஃபேக்கள், கடற்கரையில் நீண்ட நேரம் தங்குதல் ஆகியவற்றையும் அனுபவிக்க விரும்பினால் இது ஒரு சிறந்த தெரிவாகும்.

மொத்தக் கால அளவு

பறக்கும் நேரம்: திட்டத் தொகுப்பைப் பொறுத்து 5-10 நிமிடங்கள். முழு அமர்வு: தோராயமாக 20-30 நிமிடங்கள்

கடினத்தன்மை நிலை

எளிதானது முதல் மிதமானது வரை

பருவம்

நவம்பர் முதல் மார்ச் வரை (பொருத்தமான வானிலை நிலவினால் இந்தக் காலத்துக்கு அப்பாலும் செயல்பாடுகள் கிடைக்கலாம்)

தோராயமான செலவு

பாராசெயிலிங்: தோராயமாக 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் இருந்து தொடங்குகிறது, சுற்றுலா ஏற்பாட்டாளர், “மூழ்குதல்” சேர்க்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து இது வேறுபடலாம்

எப்படிச் செல்வது

பேருந்து மூலம்: வர்க்கலா நகரம் / பாறைக் குன்று பேருந்து நிறுத்தங்கள், கடற்கரையில் இருந்து சுமார் 2-3 கி.மீ. தூரம்

விமானம் மூலம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், சுமார் 45-50 கி.மீ. தொலைவில்

இரயில் மூலம்: வர்க்கலா சிவகிரி இரயில் நிலையம், கடற்கரையிலிருந்து சுமார் 3-4 கி.மீ.