பெருங்குளம் கடற்கரை அதன் அமைதியான சூழலுக்குப் பெயர்பெற்றது. ஆயினும், இங்குள்ள அலைகள் ஒரு மாறுபட்ட கதையை உருவாக்குகின்றன. இங்குள்ள திறந்தநிலைக் கடல், அலைகளின் தன்மையைப் பாதிக்கிறது. அலைகள் சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் சற்றுக் கொந்தளிப்பாகவும் காணப்படுவதால் அவற்றின் தன்மையைக் கணிக்க முடிவதில்லை. மாறும் அலைகளின் தன்மைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் திறமையான அலைச்சறுக்கு வீரர்களுக்கு இந்த இடம் பொருத்தமானது.
இந்த இடம் கட்டுமானதாரர்களால் ஏறக்குறைய முழுமையாகத் தொடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது, இதனால் இங்கு அசல் அலைச்சறுக்கு அனுபவத்தைப் பெற முடிகிறது என்பது கூடுதல் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளது. இங்கே வருகின்ற அலைச்சறுக்கு வீரர்கள் பெரும்பாலும் தங்கள் துடுப்புகளை நீட்டும்போது சிறிய அளவிலான இடையூறுகளையே எதிர்கொள்கின்றனர், எனவே அவர்கள் தங்கள் திறன்களில் முழுமையான கவனம் செலுத்த முடிகிறது.
அருகாமையில் மிகக் குறைவான வசதிகளே கிடைக்கின்றன என்பதால், இந்த இடம் தொழில்முறை அலைச்சறுக்கு வீரர்களால் அல்லது தங்களுடன் உள்ளூர் வழிகாட்டுதல் கொண்டவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
பெருங்குளம் வர்க்கலாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து, இரயில் மார்க்கமாகவும், உள்ளூர்ப் போக்குவரத்து மூலமும் அங்கு எளிதில் செல்ல முடியும்.
வர்க்கலா நகரம்: 2 கி.மீ.
திருவனந்தபுரம் நகரம்: 35 கி.மீ.
கடல் அமைதியாக இருக்கின்ற காலை நேரத்தின் முற்பகுதி அல்லது மாலை நேரத்தின் தொடக்கம் அலைச்சறுக்கு செய்வதற்கு உகந்த நேரம் ஆகும்.
1-2 மணிநேரங்கள்
வார இறுதி நாட்களிலும் மக்கள் வருகை அதிகமுள்ள பருவங்களிலும் உங்கள் நேரப்பிரிவை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.
மிதமானது
அலைகளில் பயணிக்க நவம்பர் முதல் பிப்ரவரி வரை உகந்த காலம் ஆகும்.
நிழலும் வசதிகளும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. தண்ணீருக்குள் நுழைவதற்கு முன் உங்கள் சேவை வழங்குநரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இயற்கையான கடற்கரைக் காட்சிகளைப் படம்பிடிக்க இது ஓர் அழகான இடம் ஆகும், ஆனால் சிறந்த கோணத்தில் படம் பிடிக்கக்கூடிய இடங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
திறந்தநிலைக் கடலுக்கான அணுகல், நெரிசல் இல்லாத அலைச்சறுக்குப் பகுதி