சிறயின்கீழ், காயிக்கற, கோவில்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள நீர்வழித் தடங்களில் கயாக் மூலம் சவாரி செய்வது, கேரளாவின் காயல் பகுதிகளை ஆழ்ந்த, சாகசம் நிறைந்த வழியில் அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு ஒரு வசீகரமான அனுபவத்தை அளிக்கிறது. குறுகிய கால்வாய்களையும், திறந்தநிலைக் காயல்களையும், கரையோர நீர்நிலைகளையும் ஒருங்கே கொண்ட இந்தப் பகுதி கவர்ச்சிகரமான, பார்வையாளர்களை வசீகரிக்கின்ற, பன்முகத்தன்மை கொண்ட படகுச் சவாரிக்கான சூழலை உருவாக்குகிறது. அகன்ற கரைகளுக்கிடையே காணப்படும் மென்மையான நீரோட்டம் துடுப்புப் படகுச் சவாரி செய்பவர்கள் ஆராய்வதையும், ஓய்வெடுப்பதையும் ஒன்றிணைந்து அனுபவிக்க வழிவகுக்கின்ற அதே நேரத்தில், மாறிக்கொண்டே இருக்கும் இயற்கைக் காட்சிகள் பயணம் முழுவதையும் சுவாரசியமாக வைத்திருக்கின்றன.
இந்த நீர்வழித் தடங்களின் கட்டமைப்பின் வழியே ஒருவர் பயணிக்கும்போது, உள்ளூர் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள், சிறிய குடியிருப்புப் பகுதிகள், நீர்ப்பரப்பின் விளிம்பில் அமைந்துள்ள இயற்கைத் தாவரங்கள் ஆகியவை காயல் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றன. கயாக் படகு ஓட்டுபவர்கள் மீனவர்கள் வேலையில் ஈடுபட்டிருப்பதையும், குழந்தைகள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதையும், பெண்கள் நீர்நிலைக்கு அருகில் வீட்டுவேலைகளைச் செய்வதையும் காணலாம், இது கிராமப்புற வாழ்க்கையின் உண்மையான காட்சியை அவர்களுக்கு அளிக்கிறது. பசுமையான சூழல், அமைதியான நீர்நிலைகள், அவ்வப்போது கண்ணில் படும் வனவிலங்குகள் ஆகியவை இந்தப் பகுதியை இயற்கை ஆர்வலர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் மிகவும் ஈர்க்கக்கூடிய இடமாக மாற்றுகின்றன.
மென்மையாக வளைந்து செல்கின்ற, தென்னை மரங்களின் நிழல் சூழ்ந்த கால்வாய்கள் முதல் துடுப்புப் படகு ஓட்டுபவர்கள் திறந்தநிலைக் காயலின் சூழலை உணரக்கூடிய அகன்ற பகுதிகள் வரை, இப்பகுதி பலதரப்பட்ட கயாக்கிங் அனுபவங்களையும் வழங்குகிறது. கடற்கரைப் பகுதிகள் நன்னீர் மற்றும் கடலோரச் சூழல் மண்டலங்களுக்கு இடையே ஒரு நேர்த்தியான இடைவினையைச் சாத்தியமாக்குவதன் மூலம், இந்தச் சாகசப் பயணத்திற்கு ஒரு சூழலியல் பரிமாணத்தை அளிக்கின்றன. இயற்கை அழகு, கலாச்சார உள்நோக்கு, துடுப்புப் படகுச் சவாரி அனுபவங்கள் ஆகியவற்றின் இந்தச் சேர்க்கை காயல் பகுதிகளை ஆராய விரும்புவோர் சிறயின்கீழ்-காயிக்கற-கோவில்தோட்டம் ஆகிய பகுதிகளைக் கட்டாயம் காண வேண்டிய இடமாக மாற்றுகிறது.
இந்த இடம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ்-காயிக்கற-கோவில்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.
சிறயின்கீழ் நகரம்: 03 கி.மீ.
வர்க்கலா நகரம்: 10 கி.மீ.
திருவனந்தபுரம் நகரம்: 32 கி.மீ.
காலை நேரத்தில் முற்பகுதி மிகவும் உகந்த நேரம் ஆகும், அந்த நேரத்தில் நீர் அமைதியாகவும், ஒளி மென்மையாகவும் இருக்கும்.
இந்த அனுபவம் பொதுவாக சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை நீடிக்கிறது.
நீங்கள் நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே முன்பதிவு செய்வது உகந்த யோசனை ஆகும்.
சம்பந்தப்பட்ட பகுதியைப் பொறுத்து இந்தச் செயல்பாடு எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டது வரை அமைகிறது.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.
ஒரு நபருக்கான கட்டணம் பொதுவாக 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வேறுபடுகிறது.
ஓத மாறுபாடுகளாலும், உள்ளூர் மீன்பிடிச் செயல்பாட்டு நேரங்களாலும் வழித்தடங்கள் மாறலாம்.
குறிப்பாக மென்மையான காலை நேர ஒளியில் வாழ்க்கைமுறையையும், நீர் சார்ந்த காட்சிகளையும் படம் பிடிப்பதற்கு இது ஒரு சிறந்த சூழல் ஆகும்.
இந்த அனுபவத்தில் கால்வாய் வழித்தடங்கள், திறந்தநிலைக் காயல்கள், கிராமப்புற துடுப்புப் படகுச் சவாரிப் பகுதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.