திருவனந்தபுரத்தில் கயாக்கிங் மற்றும் கனோயிங் (சிறுபடகோட்டம்) ஆகியவை பொதுவாக ஆறு அல்லது கடல் சாகசங்கள் போன்ற வெளிப்புறச் செயல்பாடுகளில் தேவைப்படுவதைப் போன்ற கடின உழைப்பு ஏதுமின்றி கேரளாவின் காயல்களை அமைதியாகவும், ஈடுபாட்டுடனும் கண்டுகளிப்பதற்கான வழியை வழங்குகிறது. உண்மையில், இந்தச் செயல்பாடு இயற்கையை மையமாகக் கொண்டதாகும். இதில் நீங்கள் குறுகிய கால்வாய்கள், வரிசையான மரங்கள் நிறைந்த பகுதிகள், முற்றிலும் பாதுகாக்கப்பட்ட அமைதியான உள்நாட்டு நீர்வழிகள் ஆகியவற்றின் வழியாக நீங்கள் மெதுவாக மிதந்து செல்வீர்கள். அதனால் நீர் அமைதியாகவும், அதன் தன்மை எளிதில் கணிக்கக்கூடியதாகவும் இருக்கும். மக்கள் பொதுவாக இதை அவசரமின்றி, நிதானமாக மேற்கொள்கின்றனர். இதனால், ஆரம்பநிலையாளர்களுக்கும், குடும்பத்தினருக்கும், சோர்வடையாமலோ அல்லது தொழில்நுட்ப ரீதியாக எதையும் கையாள வேண்டிய தேவை இல்லாமலோ இயற்கையை அனுபவிக்க விரும்புகின்ற மற்றவர்களுக்கும் இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த இடத்தில் கயாக்கிங், கனோயிங் (சிறுபடகோட்டம்) ஆகியவற்றை உண்மையிலேயே சிறப்பானதாக்குவது அங்குள்ள பாதுகாப்பு உணர்வு தான். பரந்த ஏரிகள் அல்லது ஆற்றல் வாய்ந்த நதிகளைப் போல் அல்லாமல், இந்தக் காயல் முயற்சிகள் இயற்கையாகவே மேட்டுக்கரைகள், தாவரங்கள், வளைந்து செல்லும் குறுகிய நீர்வழிகளால் சூழப்பட்ட பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவை பலமான காற்றும் அதன் காரணமாக நீரோட்டங்களும் உள்ளே நுழைவதைத் தடுக்கின்றன. அதன் விளைவாக நீங்கள் துடுப்புப் படகோட்டுவதற்கு மிகவும் சரளமான, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழலைப் பெறுகிறீர்கள். இது சீரான வேகத்தில் கீழே இறங்குதல், சறுக்கிச் செல்லுதல், சற்று நேரம் நிற்றல், ரசித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தென்னை மரங்கள், சிறிய நடைபாலங்கள், உள்ளூர் வீடுகள், பறவைகள் ஆகியவற்றைக் கொண்ட இக் காட்சி தீவிரமான சாகச அனுபவத்துக்குப் பதிலாக நீர்நிலையை ஒட்டியுள்ள உள்ளூர் வாழ்க்கையோடு ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்துகிறது.
இந்தச் செயல்பாடு தனியாகப் படகு ஓட்டுபவர்களுக்கும், சிறு குழுக்களுக்கும் சிறந்தது. கயாக் பெரும்பாலும் ஒரு நபரால் அல்லது அதிகபட்சமாக இருவரால் பயன்படுத்தக்கூடியதாகும், அதே நேரத்தில் சிறுபடகில் (கனோயில்) செல்வதென்றால் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்க விரும்புகின்ற குழுவோ அல்லது குடும்பத்தினரோ ஒன்றுசேர்ந்து செல்ல முடியும்.
கயாக்கிங் மற்றும் சிறுபடகோட்டச் (கனோயிங்) செயல்பாடுகள் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காயல் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பாதைகள் அதிகப்படியான படகுப் போக்குவரத்து, திறந்தநிலைக் கடல் சூழலின் தாக்கம் ஆகியவை இல்லாத அமைதியான உள்நாட்டுக் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் வழியாக அமைந்துள்ளன. அணுகல் இடங்களுக்குப் பொதுவாக சாலை மார்க்கமாகச் செல்ல முடியும், நீர்நிலையை அணுகும் இடங்களுக்குச் செல்ல சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். நீரின் அளவு, உள்ளூர் சூழ்நிலைகள், அமர்வை நிர்வகிக்கும் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஆகியவற்றைப் பொறுத்து சரியான பாதையும், தொடங்கும் இடமும் வேறுபடலாம்.
வர்க்கலா: 8–15 கி.மீ. (தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையைப் பொறுத்து)
திருவனந்தபுரம் நகரம்: 35–45 கி.மீ.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 40–45 கி.மீ.
காலை நேரத்தின் முற்பகுதி முதல் மாலை வரை. காலை நேரத்தில் அமைதியான நீர், குளிர்ந்த வெப்பநிலை, வனவிலங்குகளை நன்கு காணும் சூழல் ஆகியவை நிலவுவதால் பொதுவாகக் காலை நேர அமர்வுகளே விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கால்வாய் ஓரமாக உள்ளூர் நடவடிக்கைகள் குறைவதால், மாலை நேர அமர்வுகள் மென்மையான ஒளியையும் அமைதியான சூழலையும் வழங்குகின்றன.
ஓர் அமர்வுக்கு 1-2 மணிநேரங்கள். இது பொதுவாக சுருக்கமாக பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், அடிப்படைத் துடுப்புப் பயிற்சி அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதலுக்கு ஏற்ப அல்லது அவரவர் வேகத்துக்கேற்ப மேற்கொள்ளப்படும் நீர் சார்ந்த செயல்பாட்டு நேரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
எளிதானது, கயாக்கிங் அல்லது சிறுபடகோட்டம் (கனோயிங்) குறித்த முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. பாதைகள் ஆழமற்றதாக உள்ளன, தண்ணீரின் இயக்கம் குறைவாக உள்ளது, தேவைப்பட்டால் வழக்கமாக அருகிலேயே உதவி கிடைக்கின்றது.
அக்டோபர் முதல் மார்ச் வரை. இந்தக் காலகட்டம் நிலையான வானிலையையும், ஒத்தியல்பான நீர் நிலைமைகளையும் வழங்குகிறது. இந்தப் பருவத்தைத் தாண்டி, கன மழை அல்லது நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் வழித்தடத்தின் கிடைக்கும் தன்மையைப் பாதிக்கலாம்.
ஒரு நபருக்கு 500 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை. கால அளவு, படகின் வகை (கயாக் அல்லது சிறுபடகு (கனோ)), குழுவின் அளவு, வழிகாட்டி இடம்பெற்றுள்ளாரா இல்லையா ஆகியவற்றைப் பொறுத்துக் கட்டணங்கள் மாறுபடலாம்.
கயாக்கிங் அல்லது கனோயிங் (சிறுபடகோட்டம்) மேற்கொள்ளும்போது, நீங்கள் புகைப்படங்கள் எடுக்கலாம். அமைதியான நீரும் நிதானமான வேகமும் சமநிலை தவறாமல் புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக அமைகின்றன. மொபைல் போன்கள் மீதும் கேமராக்கள் மீதும் தண்ணீர் தெறிக்காமல் பாதுகாக்க நீர்புகா உறைகள் அல்லது உலர் பைகளை எடுத்துச்செல்லுமாறு பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. காலை நேரத்தில் சூரியனின் முதல் ஒளிக்கிரணம் பிரதிபலிப்புகள், தாவரங்கள், குறுகிய கால்வாய் வழித்தடம் ஆகியவற்றின் ஊடாகக் கதையைப் படம் பிடிப்பதற்கான அற்புதமான காட்சியை வழங்குகிறது. ட்ரோன் பயன்படுத்துவதாக இருந்தால், அது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடமோ அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடமோ முன்கூட்டியே விவாதிக்க வேண்டும்.
இந்த அனுபவத்தில் பொதுவாக கயாக் அல்லது சிறுபடகு, படகுத் துடுப்பு, உயிர்க்காப்பு மேலங்கி, தண்ணீருக்குள் செல்வதற்கு முன் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுணுக்க அறிவுறுத்தல்கள் ஆகியவை உள்ளடங்கும். வழங்கப்பட்டுள்ள உபகரணம் ஆரம்பநிலையாளர்களுக்குப் பொருத்தமானதாக உள்ளது, இது நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்டதாகும். பல நிகழ்வுகளில், உள்ளே நுழைதல், வெளியேறுதல், அடிப்படை வழிகாட்டுதல் ஆகியவற்றில் உதவுவதற்காக தொடங்கும் இடங்களிலும் முடியும் இடங்களிலும் ஒரு வழிகாட்டி அல்லது ஆதரவுப் பணியாளர் காணப்படுகிறார்.