தனது சந்நியாசி சீடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கூட குரு தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். அவரது முக்கியமான சிறப்புமிக்க சீடர்களில், சிவலிங்கதாச சுவாமிகள், பைரவன் சாந்தி, போதானந்த சுவாமிகள், சத்யவிரத சுவாமிகள், ஸ்ரீ நாராயண சைதன்ய சுவாமிகள், சாந்தலிங்க சுவாமிகள், நடராஜ குரு, தர்மதீர்த்தர், நாராயணதீர்த்த சுவாமிகள், எர்னஸ்ட் கிர்க் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.