கேரளாவில் மறுமலர்ச்சியின் வரலாற்றை இந்து சமயத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களின் உரிமைக்கான போராட்டங்கள் ஆகியவற்றுடன் மட்டுமே சுருக்கிவிட முடியாது. ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி, வைகுண்ட சுவாமிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். அவர்களால் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, மனிதர்களின் கண்ணியத்தை ஓரளவுக்கு உயர்த்த முடிந்தது.
நாராயண குருவின் தார்மீகத் தலைமை முன்னணி சமூகச் சீர்திருத்தவாதிகளும் சிந்தனையாளர்களும் போராட்டத்தைத் தொடர்வதற்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. குருவின் கருத்துகளால் உந்தப்பட்ட கொச்சி, மலபார், திருவிதாங்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சீடர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வந்தனர். டாக்டர். பல்பூ, டி.கே. மாதவன், சகோதரன் அய்யப்பன், குமாரன் ஆசான், மூலூர் பத்மநாப பணிக்கர், சி. கிருஷ்ணன், மூர்கோத் குமாரன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர்.