மூலூர் பத்மநாப பணிக்கர்

நாராயண குருவின் பல்திறப் புலமை வாய்ந்த சீடராகிய மூலூர், ஸ்ரீ நாராயண தர்மத்தின் போதகர், கவிஞர், ஆசிரியர், பள்ளியின் நிறுவனர், S.N.D.P. துணைத் தலைவர், ஒரு முக்கிய ஹரிஜன் தலைவர் எனப் பல துறைகளிலும் அழியாத முத்திரை பதித்துள்ளார். குருவின் உலகளாவிய பணிக்கு உதவுவதில் உறுதியுடன் இருந்த அவர், தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே எளிமையான திருமணச் சடங்குகளை அறிமுகப்படுத்த அயராது பாடுபட்டார். அவர் ஹரிஜன் சங்கங்களைத் தீவிரமாக ஒழுங்கமைத்தார், பாடல்களை இயற்றிப் பாடினார். அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகக் கடுமையான சொல்லாடல் போராட்டங்களிலும் அடிக்கடி ஈடுபட்டார். பிரஜா சங்கத்தில் பதினான்கு ஆண்டுகள் உறுப்பினராக இருந்த மூலூர், தனது சொந்த சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், பிற புறக்கணிக்கப்பட்ட குழுக்களின் முன்னேற்றத்துக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

இலக்கியத் துறையில் ஆழமாக வேரூன்றியிருந்த உயர் சாதியினரின் ஆதிக்கத்தை மூலூர் தனி ஒருவராக எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். கொடுங்கலூர் குஞ்சிக்குட்டன் தம்புரானின் கவிபாரதம் என்ற கவிதை முக்கியக் கவிஞர்களை முதன்மைப்படுத்திக் காட்டியபோது, பெருநெல்லி கிருஷ்ணன் வைத்தியர், வெளுத்தேரி கேசவன் வைத்தியர், ஸ்ரீ நாராயண குரு போன்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கவிஞர்களையும் அதில் சேர்க்க வேண்டும் என குரு பணிவுடன் வாதிட்டார். சாதிப் பெருமிதத்தின் மயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்த தம்புரான் அதற்கு மறுத்துவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெருநெல்லியை அனுமனாகவும், வெளுத்தேரியை பலியாகவும், ஸ்ரீ நாராயண குருவை வால்மீகியாகவும் சித்தரித்து, 1896-ஆம் ஆண்டில் கவிராமாயணத்தை மூலூர் வெளியிட்டார்.

ஸ்ரீ நாராயண குருதேவ மஞ்சரி என்ற அவரது கவிதை நாராயண குருவின் கொள்கைகளை வாணளாவப் பாராட்டுகிறது. மூலூரின் செல்வாக்கின் காரணமாகவே திருவனந்தபுரத்தில் உள்ள ஜூபிலி டவுன் ஹாலில் நடைபெற்ற பிரஜாசபையின் நிறைவு அமர்வின்போது ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டத்துக்கு திவான் தலைமை தாங்கும் வருடாந்திர மரபும் உருவானது. ஸ்ரீ மூலம் பிரஜாசபைக்கு பரிந்துரைக்கப்பட்ட தனது சீடரான குரும்பன் தெய்வத்தானுக்காக அவர் இயற்றிய பாடல்கள் தெய்வத்தான் பாடல்கள் (தெய்வத்தான் பாட்டுகள்) எனப் புகழ் பெற்றவை. மூலூர் தனது வாழ்க்கையை குருவின் செய்திகளைப் பரப்புவதற்காகவும், சமூக மற்றும் இலக்கியத் துறைகளில் புரையோடியிருந்த நயவஞ்சகமான சாதிப் பேயைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடுவதற்கும் அர்ப்பணித்தார்.

மற்ற தலைப்புகள்