கடற்கரைகள், கண்கவர் வனவிலங்குகள், மலைவாசஸ்தலங்கள் மற்றும் காயல்களிலேயே சில முக்கிய இடங்கள் எந்த வகையான ஊடகத்திற்கும் படம்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படலாம். விளம்பரங்கள், குறும்படங்கள் அல்லது நீளமான திரைப்படங்களும் கேரளா வழங்கும் அழகிய இடங்களால் பயன்பெறலாம். படத் தயாரிப்பாளர்கள் கேரளாவின் இயற்கை அழகினால் ஈர்க்கப்பட்டுள்ளனர் மற்றும் நாங்களும் கடவுளின் சொந்த நாட்டின் மகிமையை வெளிக்கொணர உங்களை அழைக்கிறோம்.
கேரளத்தை விவரிக்கும் போது, வானளாவிய புகழ்ச்சி மற்றும் மீஇயயைபுகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. இந்த மாநிலத்தின் அழகு மற்றும் பன்முகத்தன்மைக்கு உண்மையில் மிகுந்த ஆச்சரியத்தைத் தரும் வகையில் உள்ளது. கேரளாவின் கடற்கரைகள் மற்றும் காயல்கள், மலைவாழிடங்களோடும் காடுகள் ஒத்ததாக இருக்கிறது என்று நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் ஊடகத்திற்கு அப்பால் சென்று, இந்த நிலத்தின் ஒவ்வொரு துண்டும் அது தூரிகையிலோ, காகிகத்திலோ அல்லது திரையிலோ எதில் வரையப்பட்டிருந்தாலும் சரி, அதன் அழகு மிளிரும்.அதன் வளமான மாதிரியை உலகம் பம்பாய், தில் ஸே, மிஸ்டரஸ் ஆஃப் ஸ்பைசஸ், நிஷப்த் இன்னும் பல படங்களில் கொண்டுள்ளது.
உலகின் பத்து சொர்க்கங்களில் ஒன்று - நேஷனல் ஜியோகிராஃபிக் டிராவலர்
கடற்கரைகள், காயல்கள், மலை வாசஸ்தலங்கள், வன சரணாலயங்கள் மற்றும் பல
நறுமணப்பொருள் தோட்டங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவற்றைக் கொண்ட கிராமப்புற நிலப்பகுதி
ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் மூணாரில் விரிவான அளவில் படமாக்கப்பட்டது.
கேரளாவின் இயற்கை அழகு அரிய காட்சிக் கலாச்சாரத்தை அதற்கு வழங்கியுள்ளது, இதையொட்டி அதன் கலைப்பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. இங்கே உங்களால் அனைத்து கலைகளையும் அனுபவிக்க முடியும் – அருங்காட்சியகம் மற்றும் காட்சிகூடங்களில் மட்டுமல், வீடுகளிலும் தெருக்களிலும், முற்றங்களிலும் மற்றும் சுவர்களிலும் கூட உங்களால் அதை அனுபவிக்க முடியும். கதக்களி முதல் கலரிபயட்டு வரை, பஞ்சவாத்தியம் முதல் பூரம் வரை – பல்வேறு கலை வடிவங்களையும் திருவிழாக்களின் உயர் வெளிப்பாடுகளோடு இந்த மண் நேர்மையுடன் பாதுகாத்து வருகிறது. அதன் வளம் பலருக்கு வாழ்க்கையை வண்ணத்தையும் தந்துள்ளது, அதன் அழகு பலருக்கு ஈரப்பினைத் தந்துள்ளது.
அதிகமாக வரையறுக்கப்பட்ட காட்சிக் கலாச்சாரம்
ஆழ்ந்த கலாச்சார மற்றும் கலை வளம்
கலைவடிவங்கள் மற்றும் திருவிழாக்களின் விரிவான திறம்
தேக்கடி மற்றும் மூணாறு ஆகியவை மணிரத்னத்தின் தில் ஸேவில் இடம்பெற்றன.
கேரளா ஈர்க்கிறது! காயல்கள், கடற்கரைகள் அல்லது மலைவாசஸ்தலங்களில் மட்டுமல்ல இந்த நிலத்தின் ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் ஒரு வசியமிருக்கிறது; அதாவது பசுமையான நெல் வயல்களிலும், நறுமணப் பொருட்களின் தோட்டங்களில், வித்தியாசமான நகரங்களில் மற்றும் தெருக்களில், மழைக்காலங்களில் கூட இன்னும் வசியமிருக்கிறது. கேரளாவிற்கு இவை உயிரோட்டமுள்ள உறுப்புகளாகும்; இந்த மாநிலத்தின் சமூகக் கலாச்சார சூழ்நிலையின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகும்; அதன் உத்வேகமும் கூட. ஆயிரக்கணக்கான கதைகள் மற்றும் செல்லுலாயிடு கனவுகளை தனது கரைகளில் நிலா நதி (பாரதப்புழை ஆறு) உருவகப்படுத்தியுள்ளது. இதனால் தான் உலகளவில் கலைத்துறையில், குறிப்பாக சினிமாவில் பல ஆண்களையும் பெண்களையும் கேரளாவால் வளர்க்க முடிந்த்து.
உண்மையான ஈரக்கும் சூழல்
அதிக திறமையுள்ள மக்கள்
திரைப்படமெடுப்பதில் வளமான மரபு
குரிந்தர் சத்தான் மிஸ்டரஸ் ஆப் ஸ்பைசஸ் படம் பகுதி மூணாறில் படமாக்கப்பட்டது.
கலாச்சாரங்களின் தனிச்சிறப்பான கலவையான கேரளா பல்வேறு வகையான தோற்றங்கள் மற்றும் மனநிலைகளை வழங்குகிறது, பெரும்பாலும் பிரிட்டிஷ், சீன, போர்த்துகீசிய, டச் மற்றும் இன்னுமதிக கட்டிடக் கலைகள் மூலமாக – அவை மற்ற நாடுகளுடான அந்தந்தக் காலத்திற்கான நினைவூட்டல்களாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, எர்ணாக்குளம் மாவட்டத்தின் ஃபோர்ட் கொச்சி, மெர்ச்சண்ட் ஐவரி தயாரிப்பு நிறுவனக் காலப்படமான, காட்டன் மேரிக்கு பொருத்தமான பின்னணியை வழங்கியுள்ளது, அது உங்களை பல்வேறு நூற்றாண்டுக்கு பின்னே கொண்டு சென்று விடுகிறது. கட்டக்கலைத் தவிர, இயற்கையும் அதன் பங்கினை ஆற்றியுள்ளது. உதாரணத்துக்கு, மூணாறு ஸ்காட்லாந்துக்கு நிகரான வசீகரத்தைக் கொண்டிருக்கிறது; ஆலப்புழாவின் அழகிய நீரிவழிகள் வெனிஸ் பிரமிப்பினைத் தோற்கடிக்கின்றது; அதிரப்பள்ளியின் நீர்வீழ்ச்சி நயாகராவின் ஆக்ரோஷத்தைக் கொண்டுள்ளது. முழுமையான அங்கீகாரத்துடன் தங்களின் கருத்துக்களை மொழிபெயர்ப்பதற்கு இந்த பன்முகத்தன்மைகள் உதவுகின்றன.
பார்வையிலும் உணர்விலும் பன்முகத்தன்மை
பாணி மற்றும் பண்பில இடங்களின் தனிச்சிறப்பு
வெவ்வேறு பாணிகள் மற்றும் சகாப்தங்களை கட்டடக்கலைகள் உறுதிப்படுத்துகின்றன.
இஸ்மாயில் மெர்ச்சண்டின் காட்டன் மேரிக்கு ஃபோர்ட் கொச்சி சரியான சூழலை வழங்கியது.
கேரளாவை பற்றி குறிப்பிடுவதற்கு மிகவும் முக்கியமானத என்னவென்றால் அனைத்து முக்கியத் தலங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று ஒன்று அல்லது இரண்டு மணி நேரப் பயணத் தூரத்திற்குள் இருக்கின்றன. அதாவது ஓரிடத்திருந்து மற்றொரு இடத்திற்கு காற்றினைப் போல செல்லமுடியும், அதற்கு சாலைகள் மற்றும்இரயில்களின் கட்டமைப்புகள் உதவுகின்றன. ரம்மியமான வானிலை பயணத்தை மேலும் இனிமையாக ஆக்குகிறது. ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மழைக்காலம் தவிர ஆண்டு முழுவதும் தூய்மையான காற்றினையும் சூரிய ஒளியையும் கொண்டிருக்கிறது. அதாவது குறைந்த்து ஒன்பது மாதங்களுக்கு படப்பிடிக்கு உகந்த வானிலையை அது உங்களுக்கு வழங்குகிறது. அது படத்திற்கு கச்சிதமான சூழ்நிலை.
ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நெருக்கமான அழகிய இடங்கள்
எளிதான பயணம்
இனிமையான வானிலை
மனிரத்னத்தின் பம்பாய் படத்திற்க ஒரு பாடல் காட்சிக்கான பின்னணியை வரலாற்றுப் புகழ்மிக்க பேகல் வழங்கியது.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.